ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்துக்காக இயக்குநர் ராதாமோகன் வாங்கிய சம்பளம்?

  • December 16, 2022 / 12:47 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். அதன் பிறகு ஜோதிகாவின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது.

பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார்.

ஜோதிகாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காற்றின் மொழி’. இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகன் இதனை இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி மஞ்சு, இளங்கோ குமரவேல், சிந்து ஷியாம், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் ராதாமோகன் ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus