‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்காக இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் வாங்கிய சம்பளம்?

  • December 13, 2022 / 09:54 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் கார்த்திக். ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் கெளதம்.

இவர் நடித்த முதல் படமே டாப் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அந்த படம் தான் ‘கடல்’. அதன் பிறகு கெளதம் கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, Mr.சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம்’ என படங்கள் குவிந்தது.

இதில் அடல்ட் ஹாரர் காமெடி ஜானர் படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, கருணாகரன், பால சரவணன், ஷாரா ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus