இயக்குனர் செல்வராகவனின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படம்!

  • September 2, 2020 / 06:36 PM IST

2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.

கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இவரைப்போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரது மனைவி கீதாஞ்சலி தற்போது தான் மூன்றாவது குழந்தையுடன் கர்ப்பமாக உள்ளதாகவும், வருகிற ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்றும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை அவர் வெளியிட்டதிலிருந்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் இந்த ஜோடி மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி “மயக்கம் என்ன” படத்தில் செல்வராகவனுக்கு துணை இயக்குனராக இருந்து பின் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் “மாலை நேரத்து மயக்கம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.

கடைசியாக செல்வராகவன் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தை இயக்கியிருந்தார். சில பைனான்சியல் காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தற்போது தாமதம் ஆகியுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus