பெரியார் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கேட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இயக்குநர் செல்வராகவன்!

  • March 9, 2021 / 07:13 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், உயர்ந்த மனிதன், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இப்படம் கடந்த மார்ச் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹாரர் ஜானர் படமான இதனை செல்வராகவன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

இப்போது, இந்த படம் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் – ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று செல்வராகவன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அவரிடம் “உங்களது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஈழம் பிரச்சனை தொடர்பாக பேசியிருந்தீர்கள். இப்போது வெளியாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ஹீரோ கேரக்டரின் பெயர் ராமசாமி என்று நீங்கள் வைத்துள்ளதற்கு எதுவும் குறியீடுகள் உள்ளதா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு செல்வராகவன் சிரித்து கொண்டே “யெஸ்” என்று பதில் சொன்னார். பின், இவர் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் தான் அப்பெயரை வைத்திருக்கிறார் என இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, இது தொடர்பாக செல்வராகவன் ட்விட்டரில் “நண்பர்களே! அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus