‘சூர்யா 42’-வுக்காக போடப்படும் பிரம்மாண்ட செட்… அடுத்த ஷெட்யூல் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

  • December 15, 2022 / 02:12 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சிவா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

தற்போது, இந்த படத்தின் புதிய ஷெட்யூல் ஷூட்டிங்கை நாளை (டிசம்பர் 15-ஆம் தேதி) முதல் சென்னையிலுள்ள EVP ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டிருக்கிறதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus