“விஜய் ஆண்டனி சாரின் உடல்நிலை பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்”… இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கை!

  • January 20, 2023 / 06:53 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிப்பதுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதன் ஷூட்டிங் மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட படகு விபத்தினால் நடிகர் விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, விஜய் ஆண்டனியை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.

தற்போது, விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “விஜய் ஆண்டனி சார் இரண்டு நாட்களுக்கு முன்னாடியே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துட்டாரு. அவரை டாக்டர் 2 வாரங்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. கூடிய சீக்கிரமே விஜய் ஆண்டனி சார் ரசிகர்கள்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு. ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். சார் பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus