நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள் – செல்வராகவன் !

  • December 15, 2022 / 02:14 AM IST

காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , ஆயிரத்தில் ஒருவன் , புதுப்பேட்டை போன்ற ரசிகர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன் . சாணி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் மூலம் தற்போது நடிகனாகவும் அவதாரம் எடுத்து உள்ளார் . மோகன் .ஜி .இயக்கத்தில் பகாசூரன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் . விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது .

செல்வராகவன் அடுத்து புதுப்பேட்டை 2 , ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது . இன்னும் இவர் எந்த படத்தை இயக்குவார் என்று இதுவரை அறிவிப்பு வரவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க செல்வராகவன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ” இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு ,நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்து கொண்டு ,நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus