ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சூர்யா !

  • December 24, 2022 / 07:59 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குநர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. .

இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் சமீபத்தில் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்து உள்ளது .

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார் . அதில் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது நினைத்ததை முடிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் . மேலும் நடிகர் சூர்யா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus