சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவருக்கு அமைந்த முதல் படமே கன்னட மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘ஒந் கதே ஹெல்லா’. அதன் பிறகு தெலுங்கு மொழியில் ‘நானி’ஸ் கேங் லீடர்’ மற்றும் ‘ஸ்ரீகரம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.
‘நானி’ஸ் கேங் லீடர்’ படத்துக்கு பிறகு நடிகை பிரியங்கா மோகனுக்கு அடித்தது ஜாக்பாட். இவருக்கு தமிழ் மொழியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, அது தான் ‘டாக்டர்’. நெல்சன் இயக்கி கடந்த ஆண்டு (2021) ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இப்போது பிரியங்கா மோகன் நடிப்பில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வருகிற பிப்ரவரி மாதமும், ‘டான்’ படம் வருகிற மார்ச் மாதமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி என தகவல் கிடைத்துள்ளது.