கௌதம் கார்த்திக் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள பிரபல நடிகை!

  • December 4, 2020 / 06:12 PM IST

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக், இயக்குனர் பத்ரி வெங்கடேஷூடன் இணைந்து ஒரு திரில்லர் கதையில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

“பிளான் பண்ணி பண்ணனும்” படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க உள்ளதாகவும் தற்போது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு பிரபல நடிகை ஸ்ரீ திவ்யாவை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய இந்தப்படத்தின் இயக்குனர் பத்ரி, இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபிஸ்ட்டாக நடிப்பார் என்றும், வட சென்னையில் வாழும் ஒரு சாதாரண இளம்பெண் வேடத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் இவரை தேர்வு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கௌதம் கார்த்திக் மற்றும் ஸ்ரீதிவ்யா முதல் முறையாக இந்த படத்தில் ஜோடியாக நடிக்கவிருப்பது சிறப்பம்சம் என்றும் கூறியிருக்கிறார்.

இவர்கள் தவிர இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், பாலசரவணன், சைலஜா பிரியா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார். வருகிற ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் வில்லன் கதாபாத்திரத்திற்காக மும்முரமாக தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus