வில்லன் நடிகர் கிஷோர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்..!

  • May 9, 2020 / 04:34 PM IST

பொல்லாதவன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் கிஷோர். வித்தியாசமான டயலாக் டெலிவரி, உடல்மொழி என வில்லத்தனத்தை காட்டிய அவர், குணசித்திர வேடங்களிலும் கலக்கினார். சினிமா எடிட்டரான இவர் கன்னட மொழிகளிலும் தமிழ் மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.

இயற்கை விவசாயி, எடிட்டர், நடிகர் என பல முகங்களை கொண்ட கிஷோருக்கு தற்போது வேறு ஒரு முகம் சேர்ந்துள்ளது. ஆம், இனி அவர் இயக்குனர் கிஷோர். பிளாக் அண்ட் ஒயிட்’ என்ற படம் மூலம் அவர் இயக்குனராக இருக்கிறார். இந்தப் படத்தை முதலில் வேறு ஒரு இயக்குனர் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் கதையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து நடிகர் கிஷோர் இயக்க இருக்கிறார். தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிஷோர், ரோஜர் நாராயண், ஸ்ரீகிருஷ்ண தயாள், சுரேகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் இந்த முழு படமும் ஒரே இடத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இதை தியேட்டர்களில் இல்லாமல் ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள், பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை மையமாக வைத்து வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சில ஹீரோக்கள், இயக்குனராக மாறியுள்ளனர். அந்த வரிசையில் கிஷோரும் இப்போது இயக்குனராக களம் இறங்குகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus