பிரபல ஹீரோவுடன் வீடியோ கால் பேசிய ஜெனிலியா… எதுக்கு தெரியுமா?

  • August 10, 2020 / 08:37 PM IST

திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜெனிலியா. முதல் படமே பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட படைப்பு. இப்படி பட்ட படங்களில் நடிக்க எல்லோருக்கும் வாய்ப்பு அமையாது. ஆனால், ஜெனிலியாவுக்கு அமைந்தது. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘பாய்ஸ்’. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படம் ஜெனிலியா தமிழில் அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், ஜெனிலியாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில், ‘சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம்’ என பல படங்கள் இணைந்தது. இதில் ‘ஜெயம்’ ரவியின் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ஜெனிலியாவின் கியூட்டான நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது. ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ முதலில் தெலுங்கில் தான் ‘பொமரில்லு’ என்ற பெயரில் வெளி வந்தது. அதிலும் ஜெனிலியா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். ஹீரோவாக சித்தார்த் நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்குநர் பாஸ்கர் இயக்கியிருந்தார். நேற்றுடன் (ஆகஸ்ட் 9-ஆம் தேதி) இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#14YearsOfBommarillu’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ஜெனிலியாவின் ரசிகர்கள். இந்நிலையில், ஜெனிலியா இப்படத்தின் ஹீரோ சித்தார்த்துடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த வீடியோவை இப்படத்தின் பாடலை வைத்து எடிட் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜெனிலியா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus