ஜெய்ப்பூர் அரண்மனையில் நடிகை ஹன்ஷிகாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • October 17, 2022 / 07:52 PM IST

திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.

பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு, வாலு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, மஹா’ என படங்கள் குவிந்தது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி’, இயக்குநர் ஆர்.கண்ணன் படம், இயக்குநர் விஜய் சந்தர் படம் மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் ஹன்ஷிகாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக அந்த அரண்மனையை இப்போது புதுப்பிக்கும் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறதாம். பிரபல தொழிலதிபர் ஒருவர் தான் மாப்பிள்ளையாம். மிக விரைவில் திருமண தேதி மற்றும் மாப்பிள்ளை யார்? என்ற தகவலை ஹன்ஷிகாவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ‘வாலு’ படத்தின் ஷூட்டிங் நடந்தபோது பிரபல நடிகர் சிலம்பரசனை ஹன்ஷிகா காதலித்து வந்தார். பின், ஹன்ஷிகா அவருடைய அம்மாவின் கண்டிப்பால் அந்த காதல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus