ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் ஹரீஷ் கல்யாண்!

  • August 13, 2020 / 04:06 PM IST

2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் தற்போது தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

பிறகு இஸ்பேட்ராஜாவும்இதயராணியும், ஜெர்சி, தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது “கசடதபற” என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் “பெல்லி சூபுலு” எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்துவருகிறார்.

சமீபத்தில் ஹரீஷ் கல்யாணின் தீவிர ரசிகர் ஒருவர் அவரின் பெயரை தன் கையில் பச்சை குத்திய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த ஹரீஷ் கல்யாண் தற்போது குறிப்பிட்டுள்ளதாவது “என் மீது இவ்வளவு வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிகரை பார்க்கும்போது வார்த்தைகளே வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் யாரும் தயவுசெய்து இப்படிப்பட்ட செயல்களை செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” என்று மகிழ்ச்சி பேருவகையில் குறிப்பிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus