கேஜிஎஃப் ராக்கி பாய் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்…!

  • May 1, 2020 / 06:25 PM IST

கேஜிஎஃப் ராக்கிபாய் யஷ் வெளியிட்டுள்ள அவர் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட ஹீரோ யஷ். கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்தி,தமிழ்,கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படம் மாஸ் ஹிட்டானது. மேலும் தற்போது இந்த படத்தின் 2வது பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. கேஜிஎஃப் முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் 2வது இதையும் இயக்குகிறார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை விட 2ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் ஒவ்வொரு காட்சியும் செதுக்கி எடுக்கப்பட்டு வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி என்ற கன்னடப் படத்தில் நடித்தபோது யாஷும், ராதிகா பண்டிட் காதலில் விழுந்தனர். சில வருடங்களாகக் காதலித்த அவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அயிரா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரசிகர்களின் தொடர் வற்புறுத்தலை தொடர்ந்து, நடிகர் யஷ்ஷும் ராதிகா பண்டிட்டும் மகனின் போட்டோவை வெளியிட்டுள்ளனர். குட்டி ராக்கி பாய் என்று ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர். குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், பெயர் சூட்டு விழா லாக்டவுனுக்கு பின் நடைபெறும் என யாஷ் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus