வெளியான ஹிப்ஹாப் தமிழா இண்டிபெண்டன்ட் ஆல்பம் சிங்கிள்!

  • August 6, 2020 / 09:32 PM IST

ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தன் இசை மற்றும் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான “கிளப்புல மப்புல” என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா, 2012 ஆம் ஆண்டு திங்க் மியூசிக் கிரியேட்டர்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழன் என்ற ஆல்பம் வெளியிட்டார்.

தற்போது அதே திங்க் மியூசிக் கிரியேஷன்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழா தனது அடுத்த இண்டிபென்டன்ட் ஆல்பத்தை வெளியிடப் போவதாக செய்தி வெளியாகியது. வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து இந்த ஆல்பம் முழுமையாக வெளியிடப்படும் என்றும், “நான் ஒரு ஏலியன்” எனும் இந்த ஆல்பத்தின் சிங்கிள் இன்று வெளியாகும் என்றும் கூறியிருந்தார்கள்.

தற்போது நடிகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, இந்த லாக்டவுனில் பல வருடங்களுக்கு பிறகு தனி ஆல்பம் தற்போது வெளியிட உள்ளார். பட வேலைகளில் பிசியாக இருந்ததால் இவ்வளவு நாள் தனி ஆல்பம் வெளியிடவில்லை போல.

என்னதான் இருந்தாலும் இண்டிபெண்டன்ட் ஆல்பத்தில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஆதி, தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே இதற்காக கொண்டுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கூறியது போல இந்த “நான் ஒரு ஏலியன்” ஆல்பத்தில் வரும் “நெட்ட தொறந்தா” எனும் சிங்கிளை தற்போது வெளியிட்டுள்ளார்கள். திங்க் மியூசிக் இந்த பாடலை தற்போது வெளியிட்டுள்ளது. வெளியான முதலே இணையதளத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus