ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி, இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தன் இசை மற்றும் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான “கிளப்புல மப்புல” என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா, 2012ஆம் ஆண்டு திங்க் மியூசிக் கிரியேட்டர்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழன் என்று ஆல்பம் வெளியிட்டார்.
தற்போது நடிகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, இந்த லாக்டவுனில் பல வருடங்களுக்கு பிறகு தனி ஆல்பம் ஒன்றை தற்போது வெளியிடவுள்ளார். பட வேலைகளில் பிசியாக இருந்ததால் இவ்வளவு நாள் தனி ஆல்பம் வெளியிடவில்லை போல.
தற்போது அதே திங்க் மியூசிக் கிரியேஷன்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழா தனது அடுத்த இன்டிபென்டன்ட் “நான் ஒரு ஏலியன்” ஆல்பத்தை வெளியிடப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து இந்த ஆல்பம் முழுமையாக வெளியிடப்படும் என்று இந்தக் குழு செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நான் “ஒரு ஏலியன்” எனும் இந்த ஆல்பத்தில் வரும் “நெட்ட தொறந்தா” என்னும் சிங்கிளை வெளியிட்டார்கள்.
வெளியான முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சிங்கிள் பாடல் தற்போது ஒரு மில்லியன் வியூஸ்களை குறைந்த அளவு நேரத்தில் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக திங்க் மியூசிக் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
#1MillionForNetAhThorandha
This is straight from our Heart & Thank you for the Love, First Single #NetAhThorandha from #NaaOruAlien 👽 Hits 1 Million+ Views ! #LoveAlways https://t.co/WSCcHZU3cv@hiphoptamizha pic.twitter.com/zJ2H08pDZz— Think Music (@thinkmusicindia) August 8, 2020