இவருக்கு தான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும் – பிரதீப் ரங்கநாதன் !

  • December 2, 2022 / 10:36 AM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார் . இந்த படம் நவம்பர் 25-ஆம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் . அதில் லவ் டுடே என்ற தலைப்பை பயன்படுத்தும் போது அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். அது லவ் டுடே பட இயக்குனர் பாலசேகரன், காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள் . தலைப்பிற்கு நன்றி சார் மற்றும் தாராளமாக இருந்ததற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus