இசைஞானி இளையராஜா குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

  • July 16, 2020 / 06:41 PM IST

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற இசைக் கலைஞர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா குடும்பத்தில் தற்போது சோகமான இறப்பு ஒன்று நேர்ந்துள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இரண்டு சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் பாவலர் வரதராஜன். இதில் கங்கை அமரன் மகன்கள் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோர் ஆவர். பாவலர் வரதராஜன் அவர்களுக்கு பாவலர் மைந்தன் என்று ஒரு மகன் இருந்தார்.

தற்போது ஜோ என்று அழைக்கப்படும் பாவலர் மைந்தன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் இளையராஜா குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்போது இயக்குனர் ஆர்வி உதயகுமாரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.

இவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து பல சினிமா பிரபலங்களும் அவரது நண்பர்களும் இளையராஜா குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது சினிமா பிரபலமான டைமண்ட் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது இறப்பு பற்றி பதிவிட்டுள்ளார்.

இவர் கூறியுள்ளதாவது “இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் மகனும் என் நெடுநாள் நண்பருமான பாவலர் மைந்தன் என்கிற ஜோவின் மரண செய்தி உள்ளம் துடிக்க வைக்கிறது. இயக்குனர் ஆர் வி உதயகுமாரின் துணை இயக்குனர்கள் என்ற வரிசையில் இவர் எனக்கு மூத்தவர். என்மேல் மரியாதையும் அன்பும் சரிபாதியாக கொண்டவர்.

மென்மையான மனிதர் மெல்லிய கூச்சமான குரல் கொண்ட எளிய குணத்தினர். அஞ்சலி என்று சொல்வதோடு ஆறுதல் அடைய முடியவில்லை” என்றிருக்கிறார் டைமண்ட் பாபு.

இவரது இழப்பால் இளையராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus