உருவாகவிருக்கும் இளையராஜாவின் புதிய பிரம்மாண்ட ஸ்டுடியோ!

  • July 14, 2020 / 05:38 PM IST

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களுக்கு இசையமைத்து, தனக்கென திரையிசையுலகில் தனி இடத்தை பிடித்திருப்பவர் இசைஞானி இளையராஜா. பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இளையராஜா தனது பாடல்களை இதற்கு முன்னர் ஒரு ப்ரைவேட் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். தனது 60 ஆண்டு கால இசைப் பயணத்தில், சுமார் 1000 படங்களுக்கு இந்த ஸ்டுடியோவில் தான் அவர் இசையமைத்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இந்த ஸ்டூடியோ உரிமையாளர் இளையராஜாவை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதனால் இரு தரப்பினருக்கிடையே மனக்கசப்பு நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இளையராஜா கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பழைய தியேட்டரை வாங்கி, அதை தனது ஸ்டுடியோவாக உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும், வருகிற செப்டம்பர் மாதம் இந்த ஸ்டூடியோ திறக்கப்படும் என்றும் தற்போது செய்தி வந்துள்ளது.

தற்போது இளையராஜா விஜய் ஆண்டனியின் “தமிழரசன்” என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார் அதை தனது இல்லத்தில் தான் செய்துவருகிறாராம். இதை தொடர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் முடிந்த பிறகு தன் புது ஸ்டுடியோவில் இதர வேலைகளை தொடங்குவாராம்.

தற்போது தமிழில் மட்டும் இளையராஜா 10 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாமனிதன், கடைசி விவசாயி, துப்பரிவாளன் 2 மற்றும் தமிழரசன் உள்ளடங்கும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus