அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’வின் சுவாரஸ்ய தகவல்!

  • September 29, 2020 / 09:00 PM IST

சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, அடல்ட் காமெடி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அடல்ட் காமெடி ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது.

இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகள் திறந்த பின்பு ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையை ‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் டி.முருகானந்தம் கைப்பற்றி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus