ஜெயம் ரவியுடன் முதன் முறையாக இணைய இருக்கும் இயக்குனர் !

  • June 1, 2022 / 01:44 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பூமி . இந்த படம் நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமாக அமைந்தது . லட்சுமணன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த படம் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு பூமி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை .

இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது .மேலும் “ஜன கண மன ” மற்றும் அகிலன் ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார் . அகிலன் படம் முழுக்க முழுக்க இந்திய பெருங்கடலில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது.

அகிலன் படத்தை தொடர்ந்து நடிகர் நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . ஹரி இயக்கி உள்ள யானை படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . ஜூன் 17க்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் ஹரி இணையும் படம் பற்றின தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus