எதர்க்கும் துணிந்தவன் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி திரைப்படமாகும் .இந்த படத்தை பாண்டிராஜ் எழுதி இயக்கி இருந்தார் . சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது . இப்படத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் மற்றும் வினய் ராய் ஆகியோர் நடித்து இருந்தனர் . இமான் இசையமைத்து இருந்தார் . ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே ஆர்.ரத்னவேலு மற்றும் ரூபன் ஆகியோர் செய்து இருந்தனர் .
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் 10 மார்ச் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சூர்யாவின் நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படத்தில் சொல்லப்பட்ட சமூகச் செய்தி ஆகியவற்றிற்காக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பற்றி பேசிய படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் எதற்கும் துணிந்தவன் படம் வசூல் ரீதியாக ” ப்ளாக்பஸ்டர் ” படம் என்று தெரிவித்துள்ளார் .