மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் ? அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் தளபதி கூட்டணி !

  • October 13, 2022 / 12:26 PM IST

ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்து தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் . நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சில முக்கிய நட்சத்திர நடிகர்களுக்கு ‘ஜெயிலர்’ படத்திற்காக டெஸ்ட் லுக் சமீபத்தில் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

‘ஜெயிலர்’ படத்தின் முக்கிய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது . மேலும் பிரமாண்ட செட் ஒன்று ஹைதராபாதில் கட்டப்பட்டு உள்ளது . மேலும் இந்த படம் இயக்குனர் நெல்சன் அவரது முந்தைய படங்களை ஒப்பிடும் போது வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தின் மிக முக்கிய பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தரமணி , ராக்கி உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த வசந்த் ரவி, நடிகர் ஜெய் நடிக்க உள்ளிட்ட நாயகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள்

இந்நிலையில் சமீபத்தில் டான் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர்
சிபி சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற செய்தியும் வெளியாகி இருந்தது .
இது ரஜினிகாந்த் அவர்களின் 170 படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ஒன் லைன் கூறியிருக்கிறார் அந்த லைன் ரஜினிக்கு பிடித்துப்போக முழு கதையை தயார் செய்ய கூறியுள்ளார் . ரஜினி மற்றும் மணிரத்னம் இணையும் படம் பொன்னியின் செல்வன் 2 வெளியான பிறகு தொடங்கும் என்று கூறப்படுகிறது .

தளபதி படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் மணிரத்னம் இணைய போகிறார்கள் என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus