மீண்டும் இணைகிறதா ஆர்.ஆர்.ஆர் கூட்டணி ?

  • June 25, 2022 / 08:23 PM IST

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .

இந்நிலையில் இந்த படம் வெளியான 45 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் ஓடிடியில் மே 20-ஆம் தேதி வெளியானது தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

ஆங்கிலம் அல்லாத பிறப்மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திரையரங்கு மற்றும் ஒ.டி.டி தளத்தில் இந்த படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது . இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலியிடமும், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆர்ஆர்ஆர்’ படம் போன்றே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus