இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் மாநாடு . இந்த படம் சிம்புவின் திரைவாழ்க்கையில் இந்த படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது . மாநாடு படத்திற்கு பிறகு இவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார் . அந்த படத்தில் நாகசைதன்யா நடித்து வருகிறார் .இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது .
மாநாடு படத்திற்கு பிறகு மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு . அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது .
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் தமிழ் படம் பற்றின செய்திகள் வெளியாகி இருக்கிறது . மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது .வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் கூறப்பட்டது ஆனால் அந்த கதையை ரஜினி நடிக்கவில்லை .தற்பொழுது ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படம் எடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .
நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் . இந்நிலையில் தற்போது அவரின் ஆசை நிறைவேற உள்ளது . சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் நேற்று வெளியானது . இந்த படத்தை அடுத்து அவர் அவரு 21-வது படத்தில் நடித்து வருகிறார் . விரைவில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .