இயக்குனர் யார் தெரியுமா ?

  • August 4, 2022 / 07:22 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை . செப்டம்பர் மாதம் இந்த படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது .இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் .

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இந்தி இயக்குனர் ஃபரூக் கபிர் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சூர்யாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யாவின் லைனப்பில் இயக்குனர்கள் சுதா , ரவிக்குமார் , ஞானவேல் , லோகேஷ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது . தற்போது அந்த வரிசையில் ஃபரூக் கபிர் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus