டிராப்பானதா சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த ‘வாடிவாசல்’?… தீயாய் பரவும் தகவல்!

  • December 24, 2022 / 10:39 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். சமீபத்தில், இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், இந்த படம் டிராப்பானதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது குறித்து மீடியாவுக்கு பேட்டி கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. சூர்யாவின் ரசிகர்கள் இதை நம்ப வேண்டாம். ‘வாடிவாசல்’க்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிக விரைவில் இதன் அடுத்த அப்டேட் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus