சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ?

  • May 3, 2022 / 10:23 AM IST

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , ரைஷா வில்சன், திவ்ய தர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா ஷண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இதுவரை இந்த படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை .

இந்நிலையில் இந்த படத்திற்கு ‌”காபி வித் காதல் “என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு பிரபலமான படங்களின் தலைப்பை வைப்பார்கள் ஆனால் சுந்தர்.சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி ” காபி வித் டிடி “. அந்த நிகழ்ச்சியின் தலைப்பு மாதிரியை இந்த தலைப்பை வைத்து கவனத்தை ஈர்த்துள்ளார் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus