சினிமாவை விட்டு விலகப் போகிறாரா உதயநிதி ?

  • May 13, 2022 / 01:11 PM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர் . அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ,கேது ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .

இந்நிலையில் இவர் தற்பொழுது நெஞ்சுக்கு நீதி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார் . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . வருகின்ற 20-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது . மேலும் உதயநிதி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் .

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி மாமன்னன் படத்திற்கு பிறகு இந்த படமும் நடிப்பதாக இல்லை என்றும் அரசியலில் பொறுப்பு உள்ளதால் தொடர்ந்து அரசியலில் மட்டும் முழுநேரமாக செயல்பட போவதாக தெரிவித்துள்ளார் . இந்த செய்தி அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus