சூர்யாவுடன் மீண்டும் இணையும் கிளாஸ் இயக்குநர் !

  • January 9, 2023 / 08:42 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. .

இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் சமீபத்தில் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்து உள்ளது . அதன் பிறகு கேரளாவில் சில நாட்கள் நடந்து முடிந்தது .

இந்நிலையில் சூர்யா 42 படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் 13 கெட்டப்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர் சூர்யாவை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் ஆனால் அந்த கதை சூர்யாவிற்கு பிடிக்கவில்லையாம் . இதனால் சூர்யா காக்க காக்க 2 படத்தை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் இதற்கு கெளதம் வாசுதேவ் மேனன் ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது . காக்க காக்க 2 படத்தை கலைப்புலி .எஸ் .தாணு தயாரிக்க உள்ளதாகவும் நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus