சிம்ரன் & ஜோதிகாவை கேவலமாக பேசிய விஜய் !

  • December 14, 2022 / 08:13 PM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் இரண்டு பாடகல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . இரண்டாவது பாடலை சிம்பு பாடி இருந்தார் .

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ள ஷ்யாம் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார் . தற்போது அதில் அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை தந்துள்ளது . விஜய்யின் குஷி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷாம் 12 பி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் ஷாமுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஷாமிடம் பேசிய நடிகர் விஜய் யாருடா நீ.. வரும்போதே ரெண்டு குதிரங்க சிம்ரன், ஜோதிகாவை ஓட்டிட்டு வரன்னு கேட்டார் என்று பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்து உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus