மணிரத்னம் மீது விக்ரம் அதிருப்தி !

  • July 11, 2022 / 08:16 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .


இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா , த்ரிஷா , ஜெயம் ரவி ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் . அதன் பிறகு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம் நடித்துள்ளார் .இந்த படத்தில் விக்ரம் குறைந்த அளவிலான காட்சியில் தான் வருகிறார் என்றும் இதனால் நடிகர் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus