மாலத்தீவுக்கு சுற்றுலா… பீச்சில் ரஜினி பட பாடலை பாடி அசத்திய ஜனனி!

  • April 26, 2021 / 06:57 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி ஐயர். இவருக்கு ஹீரோயினாக அமைந்த முதல் படத்திலையே போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்து மாஸ் காட்டினார். அது தான் இயக்குநர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம். அதன் பிறகு அசோக் செல்வனின் த்ரில்லர் படமான ‘தெகிடி’யில் ‘மதுஸ்ரீ’ என்ற ரோலில் நடித்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார்.

‘தெகிடி’ படத்துக்கு பிறகு நடிகை ஜனனி ஐயருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா’ என படங்கள் குவிந்தது. ஜனனி ஐயர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, நடிகை ஜனனி ஐயர் நடிப்பில் தமிழில் பிரபு தேவாவின் ‘பஹீரா’, அசோக் செல்வனின் ‘வேழம்’, அஷ்வினின் ‘தொலைக்காட்சி’, இயக்குநர் சிம்பு தேவனின் ‘கசட தபற’, பரத்தின் ‘யாக்கை திரி, முன்னறிவான்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஜனனி ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு வீடியோவில் கடற்கரையில் நின்று கொண்டு ரஜினியின் ‘தளபதி’ படத்தின் ‘சுந்தரி கண்ணால்’ பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus