தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஜனனி ஐயர்… தொடை தெரிய கவர்ச்சி போஸ்!

  • April 9, 2022 / 07:05 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜனனி ஐயர். இவருக்கு ஹீரோயினாக அமைந்த முதல் படத்திலையே போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்து மாஸ் காட்டினார். அது தான் இயக்குநர் பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம். அதன் பிறகு அசோக் செல்வனின் த்ரில்லர் படமான ‘தெகிடி’யில் ‘மதுஸ்ரீ’ என்ற ரோலில் நடித்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார்.

‘தெகிடி’ படத்துக்கு பிறகு நடிகை ஜனனி ஐயருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா’ என படங்கள் குவிந்தது. ஜனனி ஐயர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, நடிகை ஜனனி ஐயர் நடிப்பில் தமிழில் பிரபு தேவாவின் ‘பஹீரா’, அசோக் செல்வனின் ‘வேழம்’, அஷ்வினின் ‘தொலைக்காட்சி’, பரத்தின் ‘யாக்கை திரி, முன்னறிவான்’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜனனி ஐயர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus