20 மரக்கன்றுகளை நட்ட கங்கனா ரனாவத்… இன்ஸ்டாவில் குவியும் பாராட்டுக்கள்!

  • May 27, 2021 / 12:16 PM IST

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி கங்கனா ரனாவத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டவ் தே புயலால் மும்பையில் 70% மரங்களும், குஜராத்தில் 50 ஆயிரத்திற்கும் மேலான மரங்களும் அழிந்து விட்டன” என்று குறிப்பிட்டதுடன் அவரது வீட்டில் 20 மரக்கன்றுகளை தான் இன்று நட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus