முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

  • October 29, 2021 / 02:51 PM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. கன்னட சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கன்னடத்தில் ‘அப்பு, பவர், அஞ்சனி புத்ரா, சக்ரவியூகா, ரண விக்ரமா, ஜாக்கி, பரமாத்மா, வம்சி, அரசு, மைத்ரி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இன்று (அக்டோபர் 29-ஆம் தேதி) காலை திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus