‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

  • September 12, 2023 / 07:57 PM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், நேற்று முன் தினம் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், டிக்கெட்கள் அதிகமாக விற்கப்பட்டதால் ரசிகர்கள் பலர் நிற்க கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மேலும், பலர் உள்ளே கூட செல்ல முடியாமல் திரும்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தனர். இருப்பினும் இச்சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, பிரபல நடிகர் கார்த்தியும், பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus