சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கார்த்தியின் ஆக்ஷன் த்ரில்லர் படம்!

  • August 1, 2020 / 09:05 PM IST

டொராண்டோவில் இந்த ஆண்டிற்கான (2020) சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இவ்விழா வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இச்சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட ‘கைதி’ என்ற தமிழ் திரைப்படம் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. ‘கைதி’ படம் கடந்த 2019-யில் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இதில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் கார்த்தி நடித்திருந்தார். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியிருந்தார்.

இதில் முக்கிய ரோல்களில் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி, மாளவிகா அவினாஷ், பேபி மோனிகா, அம்ஜத் கான், சேத்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இவ்விழாவில் ‘ஜெர்சி’ (தெலுங்கு), ‘டிரான்ஸ்’ (மலையாளம்), ‘சூப்பர் 30’ (ஹிந்தி) ஆகிய படங்களும் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus