Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பஞ்சாயத்து… அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த கரு.பழனியப்பன்!

  • November 27, 2023 / 05:45 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

பின், பிரபல இயக்குநர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களுமான சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் அமீருக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவு போட்டனர். தற்போது, பிரபல இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் “‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் !
இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே பருத்திவீரனில் பங்காற்றிய
பிற கலைஞர்களும் பேச வேண்டும் ! கார்த்தி உட்பட !!” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus