Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

  • February 21, 2024 / 06:51 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் “மௌனம் பேசியதே, சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் 1 & 2, லியோ” போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், த்ரிஷா தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ‘கர்ஜனை, ராம், சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி, விடாமுயற்சி’ என 5 படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நேற்று கொடுத்த பேட்டியில் “2017-ல் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்கள்” என்றும் குறிப்பாக “நடிகை த்ரிஷாவை தான் அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் கேட்டார். அவரை நடிகர் கருணாஸ் தான் பேசி அழைத்து வந்தார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டது” என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா உட்பட பல திரையுலக பிரபலங்கள் ஏ.வி.ராஜுவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். பின், ஏ.வி.ராஜு தான் பேசியதற்கு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். தற்போது, நடிகர் கருணாஸ் ஏ.வி.ராஜு தன்னை பற்றியும், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus