வனிதா வழக்கில் சூர்யாதேவிக்கு ஜாமின் வாங்கி கொடுத்த நடிகை கஸ்தூரி!
July 23, 2020 / 10:29 PM IST
|Follow Us
தற்போது இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.
இந்த பிரச்சினை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
இதில் சூர்யா தேவி நடிகை வனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதையடுத்து வனிதா சூர்யா தேவி மீது சைபர் புல்லியிங் கேஸ் கொடுத்தார். வடபழனி போலிஸார் நேற்றிரவு சூர்யா தேவியை, பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று நீதிபதி முன் சூர்யா தேவி ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது நடிகை கஸ்தூரி தனது உதவியால்தான் சூர்யா தேவிக்கு ஜாமீன் கிடைத்தது என்றும் தனது வக்கீல் சூர்யா தேவிக்கு முழுவதுமாக ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2/3 I've never judged Ms Vanitha for her personal choices. I have ALWAYS supported her right to choose. But I must condemn her & her partner's despicable public behavior and criminal offences.
Now I hear She's gone whining to the cops , with a baseless complaint. 🤣😂
இதுகுறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ளதாவது ” சூர்யா தேவி ஜாமினில் எடுக்கப்பட்டார். முக்கியமாக அவரது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மேலும் தகவல்களை விரைவில் வெளியிடுவேன்” என்றிருக்கிறார்.