சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்!

  • June 17, 2020 / 06:36 AM IST

தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த “மகாநதி” படத்திற்கு பிறகு இவர் சினிமாவில் அடுத்த உயரத்தை எட்டியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் தனது சமீபத்திய அறிக்கையில் கொரோனா லாக்டவுனிற்கு பிறகு, தான் நடிக்கும் படங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாகவும், இனிமேல் தான் ஒப்பந்தம் செய்யப் போகும் படங்களுக்கு தனது சம்பளத்திலிருந்து 20-30% வரை குறைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த செயல் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் மற்ற நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவாரண்டைன் காரணமாக சினிமாத்துறை முடங்கியிருக்கிறது. அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் பல மாத மூடியுள்ள நிலையில் எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் பல தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில பிரபலங்கள் தாங்களாக முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொள்வோம் என்று கூறி வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “பெண்குயின்”. இந்தப் படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் எனும் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus