நடிகை கீர்த்தி சுரேஷின் உருக்கமான கருத்து!

  • June 18, 2020 / 09:50 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகவிருக்கும் ‘பெண்குயின்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் வெளியாகி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் ‘மகாநதி’ என்ற படத்தில் தன் சிறந்த நடிப்பின் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார். இவர் ரஜினிமுருகன், சர்க்கார், பைரவா, சண்டக்கோழி 2, சாமி 2 போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் “பெண்குயின்”.

இந்த படத்தின் ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மற்றும் பின்னணி இசை இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. இப்படம் ஒரு திரில்லர் கதையை கொண்டதாகவும் அதில் ஒரு தாயின் கதறலை வெளிப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளது , இந்த ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக அமேசான் ப்ரைம் என்ற OTT தளத்தில் ஜுன் 19 ம் தேதி வெளியிடப்படவுள்ளது.இந்த படத்தை ஈஷாவர் கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார் . இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் இந்த திரில்லர் கதையில் ஒரு குழந்தையின் தாயாக நடித்துள்ளார்.தேசிய விருது வாங்கிய இந்த நடிகையின் படத்தை அவரது ரசிகர்கள் OTT தளத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த கதையை பற்றி தற்போது வீடியோ கான்பஃரன்ஸில் பேசிய கீர்த்தி சுரேஷ் , இந்த படத்தின் படப்பிடிப்பில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழு பற்றியும் மக்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் சினிமாவில் உள்ளவர்களின் மனஅழுத்தம் பற்றி ஒரு கேள்வி கேட்டபோது, “அனைவருமே இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்துதான் ஆக வேண்டும், வாழ்க்கையில் தடங்கல்களை நாம் எப்படி சந்தித்து மீண்டு வருகிறோம் என்பதுதான் பாடமாக அமையும். இந்த கொரோனா லாக்டவுனில் எங்கும் வெளியில் செல்லாமல் இருப்பது சிரமமாகத்தான் இருக்கிறது .ஆனால் அதையும் நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்த நேரத்தையும் உபயோகமாக செலவிடுவது பற்றி திட்டமிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus