தயாரிப்பாளராகிறாரா நடிகை கீர்த்தி சுரேஷ்?- விளக்கம்!

  • September 4, 2020 / 11:00 PM IST

2015ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பிரபல நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2000 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானாசேர்ந்தகூட்டம், விக்ரமுடன் சாமி2, விஷாலுடன் சண்டக்கோழி 2, மீண்டும் விஜய்யுடன் சர்க்கார் போன்ற முன்னணி நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை தற்போது பிடித்துள்ளார்.

அறிமுக இயக்குனரான ஈஷாவர் கார்த்திக் இயக்கத்தில் “பெண்குயின்” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது.

தனது குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வந்த கீர்த்தி சுரேஷ் சில இயக்குனர்களிடம் கதை கேட்டதாகவும் அதை தயாரிப்பதற்கு விருப்பமாக உள்ளார் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பு தற்போது தயாரிப்பாளராகும் நோக்கம் கீர்த்தி சுரேஷுக்கு இல்லை என்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறியுள்ளார்கள்.

கீர்த்தி சுரேஷின் தந்தை ஏற்கனவே 20 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் ஹைதராபாத்துக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இது இவரின் அடுத்த படப்பிடிப்புக்கான பயணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினி நடிப்பில் “அண்ணாத்த” மற்றும் “சானி காயிதம்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
Attachments area

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus