நடிகை கீர்த்தி சுரேஷை ஆபாசமாக பேசிய நபர்… போலீஸில் புகார் கொடுத்த அவரது தந்தை!

  • December 11, 2021 / 04:47 PM IST

பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.

அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின், அண்ணாத்த’ என படங்கள் குவிந்தது. கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மரைக்காயர் : அரபிக்கடலிண் சிங்கம், குட் லக் சகி, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி, போலா ஷங்கர்’ என ஆறு படங்கள் லைன் அப்பில்இருந்தது. இதில் ‘மரைக்காயர் : அரபிக்கடலிண் சிங்கம்’ என்ற மலையாள படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் நன்றாக இல்லை என்று வீடியோ விமர்சனம் செய்த நபர் ஒருவர், இதில் நடித்த கீர்த்தி சுரேஷ் பற்றி ஆபாசமாக பேசியிருக்கிறார். அவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் கீர்த்தி சுரேஷின் தந்தை, ஆபாசமாக விமர்சனம் செய்த நபர் மீது நடவடிக்கை வேண்டும் என்று கூறி போலீஸில் புகார் கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus