மருத்துவமனையில் அட்மிட்டான ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன்… அதற்கு முன்பாக ரசிகர்களிடம் சொன்ன விஷயம்?

  • August 19, 2020 / 08:55 PM IST

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சய் தத். இப்போது சஞ்சய் தத் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29-ஆம் தேதி சஞ்சய் தத்தின் பர்த்டே ட்ரீட்டாக ‘ கே.ஜி.எஃப் 2’ படத்தில் அவரின் கேரக்டர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் (ஹோம்பேல் ஃபிலிம்ஸ்) ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தது.

இப்படத்தில் சஞ்சய் தத்திற்கு ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம். படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், நடிகர் சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். பின், அவருக்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்ததாம். அதன் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்ற சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் கொஞ்ச நாட்கள் பணியில் ஈடுபடப்போவதில்லை.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளப் போகிறேன். என்னுடைய குடும்பமும், நண்பர்களும் உடன் இருக்கிறார்கள். என்னைப் பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம். மிக விரைவில் நலமுடன் திரும்பி வருவேன்” என்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்றும் தகவல் வந்தது. தற்போது, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாராம் சஞ்சய் தத். வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு, வாசலில் இருந்த அவரின் ரசிகர்களிடம் “எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று சஞ்சய் தத் சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus