மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன்… அவரே போட்ட ட்வீட்!

  • August 10, 2020 / 01:57 PM IST

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சய் தத். இப்போது சஞ்சய் தத் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29-ஆம் தேதி சஞ்சய் தத்தின் பர்த்டே ட்ரீட்டாக ‘ கே.ஜி.எஃப் 2’ படத்தில் அவரின் கேரக்டர் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் (ஹோம்பேல் ஃபிலிம்ஸ்) ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தது. இப்படத்தில் சஞ்சய் தத்திற்கு ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம். படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறேன். ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்தது. நான் நலமாக இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் நான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus