பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

  • February 13, 2023 / 06:59 PM IST

கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இரண்டு முக்கிய திரைப்படங்கள் ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘காந்தாரா’. இதில் ‘கே.ஜி.எஃப்’ பார்ட் 1 & 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. மேலும், பாக்ஸ் ஆஃபிஸிலும் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது.

‘காந்தாரா’வை ரிஷப் ஷெட்டி இயக்கியதுடன், ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது, பிரதமர் நரேந்திர மோடியை நடிகர்கள் யாஷும், ரிஷப் ஷெட்டியும் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus