என் படத்தில் நடிக்கிறாயா? – இயக்குனர் கே.வி.ஆனந்த்

  • July 18, 2020 / 10:53 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “செல்லமா” பாடலின் லிரிக் வீடியோவை இந்தத் திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.

இந்த செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.

“டாக்டர்” திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வைரலாகி வரும் “செல்லம்மா” சிங்களை தற்போது பாராட்டி கமெண்ட் செய்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இவர் குறிப்பிட்டுள்ளதாவது ” தரமான அனிருத் ரவிச்சந்தர், கலக்கல் சிவகார்த்திகேயன் மற்றும் ‘நீ ஒரு சைலன்ட் டக்கர்’ நெல்சன் திலீப்குமார், என் படத்தில் நீ நடிப்பாயா?” என்று நகைச்சுவையாக பாராட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் “உங்களுக்கு பிடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று பதிலளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் “சார் நான் ரொம்ப பாவம் நீங்களும் கலாய்க்காதீங்க. ஆனால் மிகவும் மகிழ்ச்சி உங்களுக்கு இந்த பாடல் பிடித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Nelsondilpkumar/status/1283807068781072386?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus